மரம் தங்கசாமி ஐயா

 
இவர் தான் மரம் தங்கசாமி ஐயா அவர்கள் ... இவர்
இயற்கை ஆர்வலர்...
இயற்கை பாதுகாவலர் ...
இவர் தோட்டத்தில் இயற்கை காடுகளை கண்டோம்...
அவரின் துணிச்சலிலும், பேச்சிலும் என்னை கண்டேன்...
அன்பு ஒன்றுதான் கடவுள் என்பது இவர் பேச்சு...
200 க்கும் மேற்ப்பட்ட மரம் வகைகளை அவர் வைத்துள்ளார்.
பணம் மதிப்புமிக்க சந்தனம், செஞ்சந்தனம், ரோஸ்வுட் , தேக்கு , மகாகனி மரங்களும் அதிக அளவில் வைத்துள்ளார்.
பறவைகள் தண்ணீர் குடிப்பதற்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டியும் வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசாங்கம் மரம் வளர்க்கும் மக்களுக்கு நல்ல ஊக்கம் கொடுக்கவேண்டும் என்பது இவரின் கோரிக்கை .
குழந்தை பருவத்திலே மரம் வளர்க்கும் ஆர்வம் கொண்டுவரவேண்டும். அப்போது தான் அதன் நல்ல வருமானமும், பயனும் அவர்களுக்கு தெரியும் என்றார்...
                                                            -இணைய செய்தியாளர் - வெங்கடேஷ்