சிவகங்கை காவல்துறை உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 8 பேர் கைது

   சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 8 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
கடந்த 27ம் தேதி மருதுபாண்டியர் குருபூஜைக்கு விதிமுறைகளை மீறி வாகனங்களில் சென்றவர்களை தடுக்க முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து புதுக்குளம் கிராமத்தில் மறைந்திருந்த சிங்கமுத்து, வடிவேல், ராஜகுரு, ஜோதிபாசு  உள்ளிட்ட 6 பேரும், கடலுார் மாவட்டம் வண்ணாங்காட்டில் மதியழகன், சக்திவேல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஏழு பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
-இணைய செய்தியாளர் - வெங்கடேஸ்