Showing posts with label காணாமல் போகும் திண்ணைகள். Show all posts
Showing posts with label காணாமல் போகும் திண்ணைகள். Show all posts

காணாமல் போகும் திண்ணைகள்...

      அந்தகால திண்ணை இன்னமும் நினைவில் நிற்கிறது. பாட்டி அகல் விளக்கு போடுவார்கள். அது விடிய… விடிய… எரிந்தபடி இருக்கும். வழி போக்கர்கள் யாராவது கட்டு சோற்று மூட்டையை பிரித்து அங்கு வைத்து சாபிட்டு கொஞ்ச நேரம் அசந்து தூங்கிவிட்டு விடிகாலையில் புறப்பட்டு போவார்கள். பாட்டி முழித்திருந்தால் "இந்தாப்பா தண்ணி" என்று ஒரு சோம்பு தண்ணியும் சிலசமயம் ஆவக்காய் ஊறுகாயும் கொடுப்பார்கள். "யார் பாட்டி?" என்று நான் கேட்பேன்."யாரோ அசலூர்காரா!'' என்று சொல்லிவிட்டு படுத்துவிடுவார்கள்.இப்போ அந்த திண்ணையும் போச்சு.அந்த 'மனுஷத்துவமும்' போச்சு....
-இணைய செய்தியாளர் - வெங்கடேஸ்