வெவ்வேறு இடங்களில் மணல் கொள்ளை: 11பேர் கைது

   சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள வைகை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அதன் உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
   தப்பியோடிய லாரி ஓட்டுநர் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
  இதேபோல்,காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பாலாற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள் காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மணல் கடத்த உதவியதாக 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.